०२ पालिका-व्यवस्था

चतुर्-अश्र-मण्डले व्रीहीन् निक्षिप्य
तत्र पञ्च पालिकाः स्थापयेत् ।
मध्यमे, तत्-पुरस्तात्, मध्यमस्य दक्षिणतः, मध्यमस्य पश्चात्, मध्यमस्योत्तरत
इति क्रमेण सादयित्वा,
आदौ पालिकानां मूले दूर्वाश्वत्थ-शिरीष-बिल्व-पत्राणि बद्ध्वा
श्वेत-सूत्रेणावेष्ट्य वल्मीक-मृद्भिः, शुद्धाभिर् मृद्भिर् वाऽऽपूर्य स्थापयेत् ।

तमिऴ्

அங்குரார்ப்பணம்

செளள, உபநயன, விவாஹ கார்யங்களில் முதலில் அங்குரார்ப்பணம் செய்து கொள்ள வேண்டும். சுத்தி புண்யாஹம் செய்து கொண்டு ஒரு தாம்பாளத்தில் நெல்லைப் பரப்பி, அதில் நடு அதற்கு நேர் கிழக்கு, நடுவிற்கு நேர் தெற்கு, நடுவிற்கு நேர் மேற்கு, நடுவிற்கு நேர் வடக்கு என்பதாக ஐந்து பாலிகைகளை ஸ்தாபனம் செய்ய வேண்டும். அருகம்புல், அரசு இலை, வாகை இலை, பில்வ இலை இவைகளை வெள்ளை நூலினால் பாலிகைகளைச் சுற்றிக் கட்டுவது நல்லது. மத்யம பாலிகையில் பிரம்மா முதலானவர்களையும், கீழண்டை பாலிகையில் இந்திரன்

முதலானவர்களையும், தென்னண்டை பாலிகையில் யமன் முதலான வர்களையும், மேலண்டையில் வருணன் முதலானவர்களையும், வடவண்டையில் ஸோமன் முதலானவர்களையும் ஆவாஹனம் செய்து பூஜை செய்ய வேண்டும்.

பிறகு எழுந்து நின்று, “திசாம்பதீந்” என்கிற மந்திரத்தினால் பாலிகை தேவதைகளை உபஸ்தானம் செய்து விட்டு உட்கார வேண்டும். பிராம்மணர்களைக் கொண்டு ஓஷதீ ஸுக்தத்தை ஜபம் செய்ய வேண்டும். த்ரவ்யங்களாவன: நெல்-யவம், உளுந்து - எள்-பயறு, கடுகு இவ்வளவு மட்டுமே சொல்லப் பட்டுள்ளதால் மொச்சை-கடலை, பருத்திக் கொட்டை தவிர்த்தல் நல்லது. “பிரம்மஜஜ்ஞானம்” என்கிற இரண்டு மந்திரங்களினால் நடு பாலிகையிலும் “யத இந்த்ர” என்கிற இரண்டு மந்திரங்களினால் கீழண்டை வகையறாக்களைத்