०४

ஸ்ரீமதே ஸ்ரீலக்ஷ்மீந்ருஸிம்ஹ பரப்ரஹ்மணே நம: வ்யாகரண வேதாந்தவிஸார தர்மசாஸ்த்ர ப்ரவீண மஹாவித்வான் ஸ்ரீ உ.வே. மேல்பாக்கம் நரஸிம்ஹாசார்ய ஸ்வாமி அனுக்ரஹித்த ஸ்ரீமுகம் [[TODO:परिष्कार्यम्??]]

பிராஹ்மணனுக்குப் பிறப்பு முதல் தேஹ வியோக பர்யந்தமும், தேஹ வியோகம் ஏற்பட்ட பின்பும் அவச்யம் செய்ய வேண்டிய கர்மாக்கள் பல இருக்கின்றன. இவற்றுள் வாழ்நாளில் செய்யப்பட வேண்டிய கர்மாக்கள் “பூர்வ கர்மாக்கள்” என்றும், தேஹ வியோகம் உண்டான பிறகு செய்யப்பட வேண்டிய கர்மாக்கள் “அபர என்றும் வ்யவஹரிக்கப்படுகின்றன. ஆபஸ்தம்பர், போதாயநர் முதலிய மஹர்ஷிகள் ஸ்ம்ருதிகள் மூலமாகவும், க்ருஹ்ய ஸூத்ரங்கள் மூலமாகவும் அறிவித்திருக்கிறார்கள். இவைகள் சுருக்கமாக உள்ளபடியால் இதை விவரிப்பதற்கு வ்யாக்கியானங்களான தாத்பர்ய தர்சனம் முதலிய க்ரந்தங்களை இயற்றியுள்ளார்கள். ப்ரயோகத்திற்காக (அனுஷ்டாநத்திற்கு ஸௌகர்யமாக) கபர்தி காரிகை முதலியவைகளும் ஏற்பட்டிருக்கின்றன. இவைகள் ப்ராசீனங்கள். " கர்மாக்கள்” [[TODO:परिष्कार्यम्??]]

பின்பு ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அநுஷ்டாந ஸௌகர்யார்த்தமாக “வைதிக ஸார்வ பௌமர்” என்று ப்ரஸித்தி பெற்ற தோழப்பர் என்கிற மஹான், பூர்வ கர்மாக்களின் அநுஷ்டானத்திற்காக, ‘க்ருஹ்யரத்நம்’ என்கிற க்ரந்தத்தையும், அதற்கு ப்ரமாணங்களையும் சில விசேஷங்களை விளக்குவதற்காக இதற்கு வியாக்கியானமாக ‘கண்ட பூஷணம்’ என்கிற க்ரந்தத்தையும், அபர கர்மாக்களின் விஷயத்தையும் ‘பித்ருமேதஸாரம்” என்கிற க்ரந்தத்தையும் அதன் வ்யாக்கியானமான “ஸுதீவிலோசநம்’" என்கிற க்ரந்தத்தையும் விரிவாக இயற்றியுள்ளார். பூர்வ கர்மாக்கள் - கர்ப்பாதாநம், பும்ஸவனம், ஸீமந்தோந்நயனம், ஜாதகர்ம, நாமகரணம், அந்நப்ராசனம்,செளளம், உபநயநம், வ்ரதம், ஸமாவர்த்தனம், விவாஹம், க்ருஹ ப்ரவேசங்கள் ஆகும். இவைகளுக்கு அங்கமாக உதகசாந்தி, அங்குரார்ப்பணம், ப்ரதிஸர பந்தம், நாந்தீ என்கிற வ்ருத்தி ச்ராத்தம் முதலியனவாகும். [[TODO:परिष्कार्यम्??]]

(ix)

வைதிக ஸார்வ பௌமருக்குப் பிறகு அவருடைய க்ரந்தங்களை அநுஸரித்து தெரிந்து கொள்வதற்காகவும் முக்கியமாக அனுஷ்டிப்பதற்காகவும் ஸௌகர்யமாக முறைப்படுத்தி “நைத்ருவ வீரராகவாசாரியர் ஸ்வாமி” என்பவர் பூர்வ கர்ம விஷயமாக “ப்ரயோக சந்த்ரிகை” என்கிற க்ரந்தத்தையும், அபர கர்ம விஷயமாக “ப்ரயோகதர்ப்பணம்” என்கிற க்ரந்தத்தையும் செய்து நமக்கு உபகரித்திருக்கிறார். “ஸச்சரித்ர ஸுதாநிதி’ என்கிற ஸ்ம்ருதி ஸங்க்ரஹத்தையும் இயற்றியவர் இவர். “ஸச்சரித் ரஸுதா நிதி"யின் ஆரம்பத்திலுள்ள ஆசார்ய பங்க்தி விஷயமான நமஸ்கார [[TODO:परिष्कार्यम्??]]

श्रीमन्नारायणमुनिं श्रीनिवासमुनीश्वरम् । अहोबिलनृसिंहाद्यान् गौरवान्नौमि देशिकान् ॥

ங வரையிலுள்ள சலோகங்களால் அஹோபில ஆஸ்தானத்தில் 19வது பட்டத்தில் எழுந்தருளியிருந்த ஸ்ரீநிவாஸ யதீந்த்ர மஹா தேசிகனிடம் ஆச்ரயித்தவர் இவர் என்பது ஸ்பஷ்டம். மேலும் சதுர்வேத சதக்ருது ஸ்ரீநிவாஸாசாரியர் ஸ்வாமியை விசேஷித்துக் கொண்டாடுவதில் இருந்து அந்த ஸ்வாமியிடம் அநேக தர்ம சாஸ்திர ரஹஸ்யார்த்தங்களை எல்லாமறிந்தவர் என்றும் ஏற்படுகிறது. [[TODO:परिष्कार्यम्??]]

இந்த ஸ்வாமிக்குப் பின்னிட்டு இந்த ‘ஸ்வாமியின் மருமானின் புத்ரரும் வங்கீபுரம் ராமாநுஜ தீக்ஷிதருடைய குமாரருமான ஸ்ரீநிவாஸாசாரியர் ஸ்வாமி ப்ரயோக சந்த்ரிகையை அநுஸரித்து ஸ்பஷ்ட ப்ரதிபத்திக்காக, மந்திரத்துடன் கூடிய “அநுக்ரமணிகை” இயற்றியுள்ளார். [[TODO:परिष्कार्यम्??]]

தத்கால பர்யந்தம் க்ருஹ்ய ரத்ந, ப்ரயோக சந்த்ரிகை, அநுக்ர மணிகைகளை அநுஸரித்து, அவ்வோ ப்ருஹஸ்பதிகள், பூர்வ கர்மாக்களை அனுஷ்டிப்பித்து வருகிறார்கள். இவற்றுள் சிற்சில உபாத்தியாயர்களிடம் வித்தியாஸமும் சில விஷயத்தில் காணப்படுகிறது. [[TODO:परिष्कार्यम्??]]

இப்படிப்பட்ட, ஆபஸ்தம்பருடையதான பூர்வ ப்ரயோக விஷயமான முன்கூறிய க்ரந்தங்களை அநுஸரித்து மன்னார்குடி கனபாடி வடுவூர் ஸ்ரீ உ.வே. தேசிகாசாரியார்ய ஸ்வாமி ஒரு க்ரந்தத்தைத் தன் தமிழ் உரையுடன் வெளியிட்டுள்ளார். இந்த ஸ்வாமி, ஸலக்ஷண கனபாடியாக உள்ளதுமன்றி, பூர்வாபர ப்ரயோகங்களிலும் பரம்பரையாக விஷயங்களை அறிந்து ப்ருஹஸ்பதியாகவும் அநேகர்களுக்கு அநுஷ்டானம் செய்வித்தும் வருபவர். இந்த “आपस्तम्बीयपूर्वप्रयोग” “பி” க்ரந்தத்தில் சிற்சில [[TODO:परिष्कार्यम्??]]

(x)

இடங்களில் கொஞ்சம் விவரணத்திற்காக ஸ்வ வாக்யத்தையும் சேர்த்திருக்கிறார். மேலும், கர்மாக்களில் உபயோகிக்கப்படும் மந்திரங்களைப் பூர்ணமாகவும், ஸ்வரத்துடனும் அச்சிட்டிருப்பது குறிப்பிடத் தக்கது. நாக ராக்ஷரத்தில் பொதுவாக அச்சிடப்பட்ட வேத புத்தகங்களில் ஸ்வரித ஸ்வர விஷயத்தில் பொதுவாக, ‘!’ என்கிற சிஹ்நம் குறிப்பிடுவது வழக்கம். அதில் ஹ்ரஸ்வ ஸ்வரிதத்திற்கும் இருப்பதில்லை. தீர்க்க ஸ்வரிதத்திற்கும் ப்ராசீனமான வித்தியாசம் க்ரந்தாக்ஷரத்திலுள்ள வேதகோசங்களில் ஹ்ரஸ்வ ஸ்வரிதத்திற்கு ‘U’ என்கிற சிஹ்நமும், தீர்க்க ஸ்வரிதத்திற்கு ‘1’ என்கிற சிஹ்நமும் குறிப்பிடுவது வழக்கம். அதை அனுஸரித்து இந்த க்ரந்தத்தில் (நாகராக்ஷரத்தில் அச்சிடப்பட்ட போதிலும்) க்ரந்தாக்ஷர கோசங்கள் மாதிரி ஹ்ரஸ்வ தீர்க்க ஸ்வரிதங்களுக்குச் சிஹ்நம் அமைந்திருப்பது உச்சரிப்பவர்களுக்கு சௌகர்யமாய் இருக்குமென்பதில் ஸம்சயமில்லை. ப்ருஹஸ்பதிகளாக விஷயத்தை நன்றாகத் தெரிந்து, மந்திரங்களை விடாமல் பண்ணி வைக்க விரும்புபவர்களுக்கு இந்த க்ரந்தம் மிகவும் உபயோகமாய் இருக்கும். [[TODO:परिष्कार्यम्??]]

இந்த க்ரந்தத்தில் இந்த ஸ்வாமியின் சேர்க்கையான வாக்யங்களில் சில குறைபாடுகள் தென்படுகின்றன. ஆரம்ப ச்லோகத்தில் “ரச’ என்கிற இரண்டாவது பாதத்தில் “गृह्यसूत्राविरोधेन तात्पर्यदर्शनं तथा” எழுத்துக்கள் எட்டு இருந்தாலும் கொஞ்சம் ச்லோகோச்சாரணத்திற்கு “तथा तात्पर्यदर्शनम्” என்றிருந்தால் அழகாக இருக்கும். “धृताचारधौतवस्त्रः” என்கிற வாக்யத்தில் ஆசார பதம் அநாவச்யகம் தமிழ் வ்யவஹாரத்தை அடிப்படையாகக் கொண்டதுமான “धृतधौतवस्त्रः” என்பதே சரியானதாகும். “अञ्जलिबन्धः” என்பது “साञ्जलिबन्ध” என்றிருக்க வேண்டும். “சாவு” இது ஒரு உதாரணமாகக் காண்பிக்கப்பட்டது. [[TODO:परिष्कार्यम्??]]

சில இடங்களில் இந்த க்ரந்தத்தில் சில விஷயங்களைப் பற்றி விமர்சனமும் செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக ஜீவத் பித்ருகன் செய்யும் நாந்தி ச்ராத்தத்தில், “जनकस्य” ம்ருதர்களான தன் மாதா மஹாதிகளை விட்டு, பித்ரு வர்க்கத்தில் சேர்ப்பது போல் “எனை” என்று சேர்த்துச் சொல்லும் சில உபாத்தியாயர்களைப் பற்றி விமர்சித்து, அது தவறு என்று கூறியிருப்பது உபபந்நமே. ஏற்கனவே நாம் இவ் விஷயத்தைப் பல இடங்களில் திருத்தியிருக்கிறோம். கர்மாக்களில் ஸங்கல்ப்ப விஷயத்தில் விதி வாக்யத்தை

(xi)

அனுஸரித்து பரஸ்மைபத, ஆத்மனே பதங்களை ப்ரயோகிப்பதைப் பற்றியும் இந்த ஸ்வாமி குறிப்பிட்டிருக்கிறார். இது சாஸ்திர சம்மதமே.

பொதுவாக இந்த க்ரந்தம் பூர்ணமான ப்ரயோகத்தையும், பூர்ணமான மந்திரங்களை ஸ்வரத்துடன் கற்பதற்கும் ஆருருக்ஷ க்களுக்கும் உபயோககரமாக ருக்கும் என்பதில் ஸம்சயமில்லை.

26ம் பக்கத்தில் ‘सत्यवसुसंज्ञिकेभ्यः’ ‘सत्यवसुसंज्ञकेभ्यः’ என்றிருக்க வேண்டும்.

28ம் பக்கத்தில் “यजमानकरस्य करयोर्वा मात्रं प्रोक्षणं कुर्वन्ति?” கள்ளி சான்” என்றிருக்க வேண்டும்.

[[xii]]